'லிவிங் டுகெதர்' வாழ்க்கையால் கோவையில் பெண்ணுக்கு நடந்த பண மிரட்டல்

published 1 year ago

'லிவிங் டுகெதர்' வாழ்க்கையால் கோவையில் பெண்ணுக்கு  நடந்த பண மிரட்டல்

கோவை : கோவையில் திருமணமாகாமல் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கை வாழ்ந்து 4 முறை கர்ப்பமான இளம்பெண்ணிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இன்டீரியர் டிசைனராக உள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரத்தினபுரியை சேர்ந்த பரத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த இளம் பெண் திருமணம் செய்யாமல் பரத்துடன் லிவிங் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும்,  அதன் மூலம் அந்தப் பெண் 4 முறை கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இளம்பெண்ணிடம் பரத் தனது ஐடி தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனக் கூறி பலமுறை பணம் வாங்கியதாகத் தெரிகிறது. மேலும் பரத்தின் தாயார் சாந்தி இளம் பெண்ணிடம், உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் எனது மகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாலிபரின் குடும்பத்தினர் சிலர் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். இதனால் அந்த இளம்பெண் இது குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பரத், அவரது தாயார் சாந்தி, உறவினர்கள் அருண், ராணி, தினகரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe