கோவையில் பஸ்சில் பெண்ணிடம் 3 1/2 பவுன் நகை பறிப்பு

published 1 year ago

கோவையில் பஸ்சில் பெண்ணிடம் 3 1/2 பவுன் நகை பறிப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் மண்டேலா நகரைச் சேர்ந்தவர் ஷர்புதீன். இவரது மனைவி ஷகீலா பேகம் (52). இவர் நேற்று பஸ்சில் தனது கணவருடன் கோவை வந்தார். பின்னர் இருவரும் மேட்டுப்பாளையம் செல்வதற்காக ரயில் நிலையத்திலிருந்து உக்கடம் செல்வதற்காகத் தனியார் பஸ்சில் சென்றனர். 

அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் ஷகீலா பேகத்தின் கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe