கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ஜிம் மாஸ்டர் கைது

published 1 year ago

கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ஜிம் மாஸ்டர் கைது

கோவை  : கோவை கேகே புதூரை சேர்ந்தவர் குணசேகரன்(43). இவர் அங்குள்ள ஜங்சனில் தள்ளுவண்டியில் பலகார கடை நடத்தி வருகிறார். நேற்று குணசேகரன் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் போண்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார். மேலும் அவர் குணசேகரனை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 200ஐ பறித்துத் தப்பினார். 

இது குறித்து குணசேகரன் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், குணசேகரனை மிரட்டி பணம் பறித்தது கணுவாய் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் பிரபாகரன்(எ) ஜிம் பிரபாகரன்(29) என்பது தெரியவந்தது. காவல்துறை அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe