கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவை : கோவை கெம்பட்டி காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (43), நகைப்பட்டறை உரிமையாளர். கோவை சுண்டாக்காமுத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சத்யநாதன் (53), தனியார் நிதி நிறுவன மேலாளர். இவர் கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக வெங்கடேசிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் சிறிது காலம் கழித்து ரூ.5 லட்சத்துக்குக் காசோலை கொடுத்தார். ரூ.1 லட்சத்தை எனது வங்கிக் கணக்கிலும் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.9 லட்சத்தைக் கொடுக்காமல் சத்யநாதன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

அவரிடம் வெங்கடேஷ் பல முறை கேட்டும் பணத்தைத் தரவில்லை. இதுகுறித்து கடைவீதி போலீசில் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் நிதி நிறுவன மேலாளர் சத்யநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe