கோவை பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

published 1 year ago

கோவை பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

கோவை கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி ஜமுனா(55). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து பஸ்சில் சாய்பாபா காலனி வந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

 இதனால் அதிர்ச்சியடைந்த ஜமுனா இது குறித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe