கோவையில் மாணவி உட்பட மூன்று பேர் தற்கொலை

published 1 year ago

கோவையில் மாணவி உட்பட மூன்று பேர் தற்கொலை

கோவை  : கோவை கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் . இவர் மகள் நித்யா ஸ்ரீ (19). இவர் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.  இவர் மன அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.  சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.  பின்னர் இவர் மீட்கப்பட்டார் . இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது நித்யா ஸ்ரீ தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணபதி மணியக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மனைவி ஷர்மிளா (34).  துணிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார் . உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுந்தராபுரம் சங்கம் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (35).  கட்டட தொழிலாளி . இவரது பைக் சமீபத்தில் பழுதானது . இதனால் மனவிரைத்தையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe