சூலூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவன் பலி

published 1 year ago

சூலூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவன் பலி

கோவை : கோவை அடுத்த சூலூர் கல்ல பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் திவாகர்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று திவாகர் பைக்கில் இடையர்பாளையம் - கல்லபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது.

 இதில் தூக்கி வீசப்பட்ட திவாகர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாகக் கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கந்தசாமி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் ராஜ்(59) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe