கோவையில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

published 2 years ago

கோவையில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை, ஜூன்.13- கோவை பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு சாமநாயக்கன் பாளையம் மைதானத்தில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் ஒரு மூதாட்டி சந்தேகத்திற்கிடமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மூதாட்டி சாமநாயக்கன் இந்திரா நகரைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 62) என்பதும் அவர் மீது ஆனைமலை, துடியலூர்  உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe