கோவையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

published 1 year ago

கோவையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

கோவை : கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற சிலர் முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

சுமார் 65 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe