சாய்பாபா காலனியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

published 1 year ago

சாய்பாபா காலனியில் கஞ்சா விற்ற  2 பேர் கைது

கோவை : கோவை சாயிபாபா காலனி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிஎன் புதூர் இந்திரா நகரில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகப்படும் படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். 

அவரை பிடித்து போலீசார் விசாரிக்கையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த பெயிண்டர் பெருமாள்(21) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், போத்தனூர் போலீசார் நேற்று சாரதா மில் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தியேட்டர் அருகே நின்றிருந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். சோதனையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த விக்னேஷ்(32) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe