கோவையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு பிரசவம்

published 2 years ago

கோவையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு பிரசவம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை :  நாச்சிபாளையம் அருகே அவசரம் கருதி கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பகுதி ஆம்போதி ஊராட்சி.இவ்வூராட்சியை சேர்ந்த நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சரவணா(25) - துர்கா(23).

இத்தம்பதிக்கு திருமணமாகி இரு ஆண்டுகளாகிறது.இந்நிலையில் துர்கா கர்ப்பமாகியுள்ளார்.இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான துர்காவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதனால் அவசர உதவி எண் 108 ஐ சரவணா அழைத்துள்ளார்.சம்பவம் குறித்து அறிந்த 108 ஊழியர்கள் நந்தகோபால்,குமுதா உள்ளிட்டோர் விரைந்து வந்து நிறைமாத கர்ப்பிணியான துர்காவினை ஆம்புலன்சிஸ் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் நாச்சிபாளையம் அருகே வந்து கொண்டு இருந்த பொழுது கர்ப்பிணி துர்காவிற்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது.இதனால் அவசரம் கருதி ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  நடுவழியிலே வாகனத்தை நிறுத்தி பிரசவம் பார்த்துள்ளனர்.இதில் சரியாக இன்று காலை 10.20 மணிக்கு அழகான ஆண் குழந்தை 2 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்துள்ளது.பின்னர்,முதலுதவி சிகிச்சைக்கு பின்னர்,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி அதிகரித்த காரணத்தால் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்சு ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகவே பாராட்டி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe