பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடியவர் சிக்கினார்

published 1 year ago

பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடியவர் சிக்கினார்

கோவை: வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(52). இவர் கோவை கணபதியில் தங்கி ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாதவன் பஸ்சில் கணபதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனை வந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரூ. 120 ஐ பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

உடனே சுதாரித்த மாதவன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் பணம் திருடியது கோவையில் தங்கி வேலை பார்க்கும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த சதீஷ்குமார் மராவி(19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe