சித்தப்பா வீட்டில் கைவரிசை : 25 பவுன் நகையை மீட்ட போலீசார்

published 1 year ago

சித்தப்பா வீட்டில் கைவரிசை : 25 பவுன்  நகையை மீட்ட போலீசார்

கோவை:  கணபதி தெய்வநாயகி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஜெபஸ்தையன் என்பவரது மகன் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும்  பிரேம் மற்றும் ஸ்டீபன் மற்றும் இவர்களது மனைவிமார்கள் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவரது இரு மகன்களும் வீட்டிற்கு தேவையான டைல்ஸ் மொத்த வியாபாரம் வெள்ளக்கிணறு பகுதியில் குடோனில் வைத்து செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி காலை தனது மனைவி மகன் ஸ்டீபன் மற்றும் இரு மருமகளுடன் சிவகங்கை உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து அன்றைய வசூல் பணத்தை கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி  சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 28ம் தேதி அதிகாலை குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்த ஆரோக்கியசாமி வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த  25 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்  சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோவை கிழக்கு சரக உதவி ஆணையர் பார்த்திபன்  மேற்பார்வையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரோக்கிய சாமியின் உறவினரான சித்தாபுதூரை சேர்ந்த சவரிமுத்து என்பவரது மகன் மரியம் அமுதம் (37) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 25 சவரன் தங்க நகை மீட்ட சரவணம்பட்டி காவல்துறையினர் மரியம் அமுதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe