கோவையில் பேல்பூரி கடை வைப்பதில் வடமாநில இளைஞர்களிடையே மோதல் - இருவர் படுகாயம்.

published 1 year ago

கோவையில் பேல்பூரி கடை வைப்பதில் வடமாநில இளைஞர்களிடையே மோதல் - இருவர் படுகாயம்.

கோவை : கோவை சிங்காநல்லூர் ஹோப் கல்லூரி அருகே ராமானுஜர் நகர் உள்ளது. இங்கு மாலை நேரங்களில் சாலையோரம் தள்ளுவண்டியில் பேல் பூரி, பானிபூரி கடைகள் இயங்கி வருகின்றது. குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் கடை போடுவதற்கு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நிகழ்வதாக தெரிகிறது.

அதேபோல் இன்றும் கடை போடுவதில் வடமாநில இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகியுள்ளது. இதில் ஒரு தரப்பினர் கத்தியை கொண்டு சண்டையிட்டதாக தெரிகிறது. இதில் அந்த தரப்பினர் மற்றொரு தரப்பினரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சத்திரசால்(21) மற்றும் உதாசிங்(41) ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கியதில் இருவருக்கும் படு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கத்தியால் சண்டையிட்ட தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe