கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்கம், வெள்ளி கொழுசை திருடிய மர்ம நபர்

published 1 year ago

கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்கம், வெள்ளி கொழுசை திருடிய மர்ம நபர்

கோவை : கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்கம், வெள்ளி கொலுசைத் திருடிய மர்ம நபரை காவல்துறை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (67). இவரது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில், சம்பவத்தன்று அவர் 5.75 பவுன் தங்க நகை, வெள்ளிக்கொலுசுகளைக் கழட்டி கைக்குட்டையில் சுற்றி தனது பேக்கில் வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக திருடிச் சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிந்து நகை மற்றும் வெள்ளி கொலுசைத் திருடிச்சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe