கோவை மாநகரில் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

published 2 years ago

கோவை மாநகரில் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG


கோவை:  தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளைத் தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது. இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது.

 

 

இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சாலைகள், சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி துவங்கியுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து தண்ணீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகள் துவங்கி விட்டன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் மண்டல வாரிய ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe