அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர்…

published 1 year ago

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர்…

கோவை: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு ஓடினர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடன் தகுதி கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவையில் இன்றைய தினம் நடத்தப்பட்டது.

நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கிய இப்போட்டி எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடையுமாறு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இப்போட்டி 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என நடத்தப்படுகிறது.

மேலும் இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய் இரண்டாம்  பரிசாக 3000 ரூபாய் மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

ஓட்டப்போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் போட்டியாளர்களுடன் இணைந்து ஓடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe