பூட்டிய வீட்டில் நான்கு பவுன் நகை திருட்டு…

published 1 year ago

பூட்டிய வீட்டில் நான்கு பவுன் நகை திருட்டு…

கோவை:/கோவை பட்டணம் ரோடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37).  இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் . இவர் மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் . நேற்று இவரும் இவர் மனைவியும் குழந்தையைக் காண அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். 

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த நான்கு பவுன் தங்க நகையை திருடி தப்பி சென்றனர்.  இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe