பிட்காயின் முதலீட்டில் பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி...

published 1 year ago

பிட்காயின் முதலீட்டில் பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி...

கோவை: பிட்காயின் முதலீட்டில் பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையை சேர்ந்தவர் அழகு மீனாட்சி(48). கடந்த மாதம் இவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், கூகுள் மேப் குறித்து ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அழகு மீனாட்சி 2 ரிவ்யூ கொடுத்ததற்கு ரூ.150 லாபம் கிடைத்தது. அதன் பின்னர் அழகு மீனாட்சி டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் பிட்காயினில் எப்படி முதலீடு செய்வது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அழகு மீனாட்சி 12 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தார். 

ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரவில்லை. அழகு மீனாட்சி முதலீடு செய்த ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்தை மோசடி செய்து விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த அவர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதுகுறித்து அழகு மீனாட்சி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe