சமையலர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு...

published 1 year ago

சமையலர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு...

கோவை: சிங்காநல்லூரில் சமையலர் வீட்டில் 7 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா செட்டியார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(35). சமையலர். இவர் மற்றும் இவரது மனைவி சம்பவத்தன்று உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பியதும் அவரது மனைவி தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை கழட்டி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்தார். ஆனால் அதன்பின்பு சில நாட்கள் கழித்து பார்த்தபோது அலமாரியின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே வைத்திருந்த 7 பவுன் தங்க நகையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். 

இது குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe