போக்சோ வழக்கு கைதி பணியின் பொழுது தப்பி ஓடிய விவகாரம்- கோவை மத்திய சிறை காவலர்கள் தற்காலிக பணி நீக்கம்…

published 1 year ago

போக்சோ வழக்கு கைதி பணியின் பொழுது தப்பி ஓடிய விவகாரம்- கோவை மத்திய சிறை காவலர்கள் தற்காலிக பணி நீக்கம்…

கோவை: கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் நிலையில் நன்னடத்தை கைதிகளை போலீசார் பாதுகாப்புடன் பணியமத்துவர். இந்நிலையில் இன்று காலை பெட்ரோல் பங்கில் பணியிலிருந்து கூடலூர் மகளிர் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்ற கைதி அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து கோவை காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, பணியிலிருந்த ஜெகநாதன், கனிராஜ், விக்னேஷ் குமார் ஆகிய காவலர்களை   தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மூன்று காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe