வீரபாண்டி பேரூராட்சி முத்தமிழ் நகர் அரசு பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்து…

published 1 year ago

வீரபாண்டி பேரூராட்சி முத்தமிழ் நகர் அரசு பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்து…

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் முத்தமிழ்நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்  படிக்கும் மாணவர்களுக்காக  பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த அமைச்சர் முத்துசாமி உடனடியாக காலை மற்றும் மாலையில் பள்ளி நேரத்தில் கூடுதலாக  பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.அதன்படி தற்போது கூடுதல்  அரசு பேருந்து இயங்க துவங்கி உள்ளது.

இதனை பட்டாசு வெடித்தும், பூஜை  செய்தும் பேரூராட்சி நிர்வாகத்தினரும், பள்ளி மாணவ,மாணவியரும் வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, பேரூராட்சி தலைவர் பத்மாவதி ஆகியோர் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கூடுதல் பேருந்து இயக்கப்பட்டிருப்பதற்கு பள்ளி மாணவர்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe