மாஜி விற்பனை வரி அலுவலர் வீட்டில் நகை திருட்டு…

published 1 year ago

மாஜி விற்பனை வரி அலுவலர் வீட்டில் நகை திருட்டு…

கோவை: கோவை பீளமேடு பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மல்லிகா(50). இவர் விற்பனை வரி துறையில் அலுவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் கதவை திறந்து வைத்துவிட்டு மொட்டை மாடியில் துணி காய போட சென்றார். 

அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் பீரோவில் வைத்திருந்த 7 1/2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த மல்லிகா பீரோ திறக்கப்பட்டு நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe