கனமழை காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டது...

published 1 year ago

கனமழை காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டது...

கோவை: கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். கன மழை பெய்யும் பொழுதெல்லாம் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்றும்  மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதி கன மழை பெய்ததால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கோவை குற்றால அருவிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்து நீரின் வரத்து இயல்பான நிலைக்கு வரும் வரை பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe