கத்தியை காட்டி மிரட்டிதொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது…

published 1 year ago

கத்தியை காட்டி மிரட்டிதொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது…

கோவை: கோவை அடுத்த பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோயில் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(38). கூலி தொழிலாளி. இவர் நேற்று உக்கடம் பழைய மீன் மார்க்கெட் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700 ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர். 

இது குறித்து செல்வம் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது கோவை சாயிபாபா காலனி ராஜ் நகரை சேர்ந்த அன்பு(24) மற்றும் குன்னூர் பெரியவண்டி வாசல் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe