நிறுவன ஊழியரிடம் ரூ. 5.49 லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலிசார் விசாரணை...

published 1 year ago

நிறுவன ஊழியரிடம் ரூ. 5.49 லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலிசார் விசாரணை...

கோவை: கோவையில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 5.49 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரகாஷ்(30). பிகாம் பட்டதாரியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் டெலிகிராம் குழுவில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஹரிபிரகாஷ், அதன் லிங்க்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். 

பின்னர் ஆன்லைன் மூலம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 5.49 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு எந்த விதமான லாப தொகையும் வரவில்லை. பணம் முழுவதையும் மர்ம நபர்கள் மோசடி செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிபிரகாஷ் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe