தனியார் மில் குடியிருப்பில் வடமாநில பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு...

published 1 year ago

தனியார் மில் குடியிருப்பில் வடமாநில பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு...

கோவை: கோவையில் தனியார் மில் குடியிருப்பில் வடமாநில பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெய்னால் ஷேக். இவரது மனைவி சாருசர்மார்(42). இவர்கள் இருகூர் குரும்ப பாளையம் ரோட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். மில் வளாக குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெய்னால் ஷேக் தனது சொந்த ஊரான கொல்கத்தா சென்று விட்டார். வீட்டில் சாருசர்மார் மட்டும் இருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாருசர்மாரை பார்க்க சென்றார். அப்போது அவர் உடலில் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அந்த பெண் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு போன் செய்து விவரத்தை கூறினார். அவர் வந்து பார்த்த போது தாடை, கண், காது உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து உடனே அவர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். தனியார் மில் வளாக குடியிருப்பில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த மில்லில் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe