வடவள்ளி அருகே பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

published 2 years ago

வடவள்ளி அருகே பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையில் பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு வடவள்ளி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38), ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பதும் தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதும், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஓட்டி கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe