கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட சிறுவன் உட்பட இருவர் கைது...

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட சிறுவன் உட்பட இருவர் கைது...

கோவை:  குனியமுத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் சந்தேகம் படும் படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில், சிறுவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற சுகுணாபுரம் சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவனிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 110 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்ற ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe