சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு மருதூர் சுப்பிரமணியர் கோயிலில் அம்மன் வேடமிட்டு பக்தர்கள் பரவசம்...

published 1 year ago

சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு மருதூர் சுப்பிரமணியர் கோயிலில் அம்மன் வேடமிட்டு பக்தர்கள் பரவசம்...

கோவை: இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. நாளை திருகல்யாண நிகழ்வு நடைபெறும். இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் மருதூர் சுப்பிரமணியர் கோயில் சூரசம்ஹார திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் வேடமிட்டு நடன கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் ஆடினர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடன கலைஞர்கள் பம்பை உருமி இசை கருவிகளின் இசைக்கு நடனமாடியது அங்குள்ள அனைவரையும் பரவசத்தில் பக்திப்ஆழ்த்தியது.  

ஆண்டுதோறும் சூரசம்ஹாரத்தை ஒட்டி இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கமாகும். அதனை தொடர்ந்து இன்று சூரசம்ஹார நிகழ்வும் நாளை திருகல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe