நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உதவி பேராசிரியர் தற்கொலை...

published 1 year ago

நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உதவி பேராசிரியர் தற்கொலை...

கோவை: கோவையில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உதவி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தங்கியிருந்த வீட்டில் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி நேதாஜி புரத்தை சேர்ந்தவர் சண்முக செல்வம் (62). இவரது மகன் தனபிரபு (33). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்தார். கோவை உப்பிலிபாளையம் பாரதி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று இவர் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதைப்பார்த்த வீட்டு உரிமையாளர் பொள்ளாச்சியில் உள்ள தனபிரபுவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மேலும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தனபிரபு தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர். 

அப்போது தனபிரபுவின் அருகில் நைட்ரன் வாயு கருவி இருந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், தனபிரபு எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கைப்பட எழுதி இருந்தார். தனபிரபு பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்துள்ளார். அதில் பணத்தை இழந்தாரா? அல்லது அவரது தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe