சங்கனூரில் மளிகைக்கடை பெண் மீது தாக்குதல்.. போலீஸ் விசாரணை

published 1 year ago

சங்கனூரில் மளிகைக்கடை பெண் மீது தாக்குதல்.. போலீஸ் விசாரணை

கோவை: கோவையில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் மளிகைக்கடைக்கார பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சங்கனூர் கணபதி பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் வீட்டு முன்பு மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பணம், கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இவர்களது வீட்டருகே வசிக்கும் மேகலா(48) என்பவருக்கும், சாந்திக்கு தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக மீண்டும் தகராறு எழுந்தது. அப்போது மேகலாவின் சகோதரர் பாக்கியராஜ், தகாத வார்த்தைகளால் பேசி சாந்தியை தாக்கினார். இதில், சாந்தியின் கணவர் கிறிஸ்டோபர், அவரது நண்பர்கள் மதன், ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து பாக்கியராஜ், மேகலாவை தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து இரு தரப்பிலும் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பாக்கியராஜ், கிறிஸ்டோபர், ராஜசேகர், மதன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe