அங்க சுத்தி இங்க சுத்தி ஆட்சியர் அலுவலத்திலேயே கையை வைத்த திருட்டு கும்பல்…

published 1 year ago

அங்க சுத்தி இங்க சுத்தி ஆட்சியர் அலுவலத்திலேயே கையை வைத்த திருட்டு கும்பல்…

கோவை: கோவை கலெக்டர் அலுவலகம் அருகே 2 ஏடிஎம் சென்டரில் நடைபெற்ற கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கலெக்டர் அலுவலகம் அருகே இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ, சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் சென்டர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்தியன் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் முன்பக்க கண்ணாடிக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஏடிஎம் சென்டரின் கண்ணாடி கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. 

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ''அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் சென்டரின் கண்ணாடி கதவு கற்களை கொண்டு வீசி உடைக்கப்பட்டுள்ளது. யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரம் பாதுகாப்பாக உள்ளது. பணம் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது’'. என்றனர்.
கோவையில் எப்போதும் மக்கள் நடமாட்டும் உள்ள பிரதான பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe