இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை-கணவர், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு...

published 1 year ago

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை-கணவர், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை காந்திபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் அனுபமா(33). ஐடி ஊழியர். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், கோவை என்ஜிஜிஓ காலனி செங்காளிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(36) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தேன். எனது கணவர் வீட்டில் இருந்தே ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணமான 2வது மாதத்தில் இருந்தே எனது மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் மீரா என்னை கொடுமைப்படுத்தினர். எனக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி திட்டினர். பின்னர் நான் எனது கணவருடன் சென்னை ஆதம்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்றேன். அங்கிருந்து கோவைக்கு வந்த எனது கணவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். 

மேலும் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் 10 பவுன் நகை, எனது தந்தை சொத்தை எழுதி கேட்கின்றனர். இதற்கு எனது கொழுந்தனார் பாலாஜி என்பவரும் உடந்தையாக செயல்படுகிறார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின் பேரில், போலீசார் வரதட்சணை கொடுமை கொடுத்ததாக ஸ்ரீகாந்த், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மீரா, தம்பி பாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe