மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு...

published 1 year ago

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு...

கோவை: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நலத்திட்டங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு திட்ட களப்பணியாளர்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.

தரவுகள் கணக்கெடுக்கும் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் ஒரு மாற்றுத்திறனாளியை கூட விடாமல் அனைத்து தகவல்களையும் திரட்ட வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe