கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் கையெழுத்து போட்டு மோசடி.!

published 1 year ago

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் கையெழுத்து போட்டு மோசடி.!

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிலவரி உச்ச வரம்பு உத்தரவு கடிதத்தில்
உதவி கமிஷனர் கையெழுத்திட்ட இளநிலை உதவியாளர் தலைமறைவாகியுள்ளார்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் நிலவரி உச்சவரம்பு உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் உதவி கமிஷனராக இளவரசி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் விடுமுறையில் இருந்த போது நிலவரி சம்பந்தமான உத்தரவு கடிதத்தில் அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ஒருவர் உதவி கமிஷனர் இளவரசியின் கையெழுத்தை போட்டு கணபதி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

உதவி கமிஷனர் இளவரசி விடுமுறையில் இருந்து வேலைக்கு வந்ததும் இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உதவி கமிஷனர் இளவரசி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதனைத்தொடர்ந்து இளநிலை உதவியாளர் பணிக்கு வராமல் தலைறைவாகி விட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe