வீடு புகுந்து திருட முயன்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது...

published 1 year ago

வீடு புகுந்து திருட முயன்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது...

கோவை: கோவையில் வீடு புகுந்து திருட முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் வின்சென்ட் காலனியை சேர்ந்தவர் ஜமீல் இம்ரான்(37). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் உடைமைகள் சிதறி கிடந்தது. ஆனால் பொருட்கள் திருடு போகவில்லை. 

இது குறித்து ஜமீல் இம்ரான் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். விசாரணையில், வீடு புகுந்து திருட முயன்றது பொன்னையராஜபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நிசாந்த்(19) மற்றும் செட்டி வீதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe