கோவையில் பழைய பிளாஸ்டிக் வாங்கி ரூ.10 லட்சம் மோசடி..!

published 1 year ago

கோவையில் பழைய பிளாஸ்டிக் வாங்கி ரூ.10 லட்சம் மோசடி..!

கோவை: பெரம்பலூரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் இளம்பரிதி(26). இவர்கள் சென்னை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வியாபாரிகளிடம் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி மறுசுழற்சி செய்து வருகின்றனர்.

அப்போது அவர்களுக்கு கோவை போத்தனூர் எம்எஸ் நகரை சேர்ந்த வியாபாரி இப்ராஹிம்(45). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் இப்ராஹிம் பிளாஸ்டிக் பொருட்களை இளம்பரிதி நிறுவனத்துக்கு அனுப்பி தொழில் செய்து வந்தார்.

அப்போது இப்ராஹிம் முன்பணமாக ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 797 பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அவர் தொழில் ரீதியான தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இளம்பரிதி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது இப்ராஹிம் பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

இது குறித்து இளம்பரிதி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe