புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்காதான் - துவக்கி வைத்த மாநகர காவல் துணை ஆணையர்...

published 1 year ago

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்காதான் - துவக்கி வைத்த மாநகர காவல் துணை ஆணையர்...

கோவை: புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற வாக்காதான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி நடந்து சென்றனர்.

உலகளவில் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக பல்வேறு விதமாக ஏற்படும் புற்றுநோய் மக்களிடையே தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.இதனிடைய இந்த புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை விஜி மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்திஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து செவிலியர் மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe