டெக்ஸ்டூல் பாலம் அருகே வங்கியை உடைத்து கொள்ளை முயற்சி

published 1 year ago

டெக்ஸ்டூல் பாலம் அருகே வங்கியை உடைத்து கொள்ளை முயற்சி

கோவை: கோவையில் வங்கியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் லட்சுமி புரத்தில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கணபதி பகுதியை சேர்ந்த பாலாஜி(35) கிளை மேலாளராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி வங்கி வழக்கம்போல் செயல்பட்டது. பின்னர் மாலையில் அவர் வங்கியை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் விடுமுறை என்பதால் வங்கி திறக்கவில்லை.

இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கி ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பணம், நகைகள் இருக்கிறதா? என தேடி உள்ளனர். 
எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாததால் கொள்ளை முயற்சியை பாதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

மறுநாள் வங்கியை திறக்க வந்த பாலாஜி ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த 3 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். 
முதற்கட்ட விசாரணையில், வங்கி லாக்கரை உடைக்க முயன்ற கொள்ளையர்கள் அது முடியாததால் சென்றதும், இதனால் லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியதும் தெரியவந்தது.

இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe