சரவணம்பட்டியில் வீடு புகுந்து 28 பவுன் நகை கொள்ளை

published 1 year ago

சரவணம்பட்டியில் வீடு புகுந்து 28 பவுன் நகை கொள்ளை

கோவை: சரவணம்பட்டியில் வீடு புகுந்து 28 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோடு முருகன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி இளவரசி (47). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற அவரது மகன் மதியம் வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, உடைமைகள் சிதறி கிடந்தது. உள்ளே பீரோ திறந்து கிடந்தது.

உடனே அவர் தனது தாயார் இளவரசியை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே வீட்டுக்கு திரும்பிய இளவரசி பார்த்த போது, பீரோவில் இருந்த ஆரம், பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட 28 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த இளவரசி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், இளவரசி வழக்கமாக கதவை பூட்டி விட்டு சாவியை வெளியே காலணிக்கு அடியில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ சாவியை எடுத்து கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும், அங்கு கதவு உள்ளிட்ட இடங்களில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe