கோவையில் தாயை அடித்து உதைத்த மகன் கைது

published 1 year ago

கோவையில் தாயை அடித்து உதைத்த மகன் கைது

கோவை: கோவையில் குடும்ப தகராறில் தாயை அடித்து உதைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பி.கே. புதூர் பழனியப்பா நகரை சேர்ந்தவர் சாரதா(52). இவரது மகன் தினேஷ்(31). டிரைவர். இவர் குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தினேஷ் தனது தாயாரை பார்க்க பிகே புதூர் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே குடும்ப தகராறு எழுந்தது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தினேஷ் தனது தாய சாரதாவை அடித்து உதைத்தார்.

இது குறித்து சாரதா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை தாக்கிய மகன் தினேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe