காவலர் குடும்பத்தினரின் சுயத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை அங்காடி...

published 1 year ago

காவலர் குடும்பத்தினரின் சுயத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை அங்காடி...

கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினரின் கண்காட்சி மற்றும் விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 39 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டு அதில் வீட்டு முறை உணவு பொருட்கள், சமையலுக்கு தேவையான பொடிகள், இனிப்பு வகைகள், துரித உணவுகள், திணை வகை உணவு பொருட்கள், பழச்சாறுகள், அணிகலன்கள், குளிர்கால உடைகள், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், பால் உற்பத்தி பொருட்கள், புடவைகள், புத்தகங்கள், மருத்துவ பொருட்கள், மின்சாதன பொருட்கள், உடைகள், மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விற்பனையும் நடைபெறுகிறது.

 

இன்று முதல் 24ம் தேதி வரை 
நடைபெற உள்ள இந்த கண்காட்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

விற்பனை கூடங்கள் அமைத்துள்ள அனைவரும் காவலர் குடும்த்தினர்கள் என்பதும் இவர்களுக்கு சுயத்தொழில்   பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இவர்கள் தொழில் துவங்குவதற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மானியங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சிக்கு வரும் இதர பொதுமக்களுக்கும் சுய தொழில் துவங்க எண்ணினால் அவர்களுக்கும் தகுதிகளின் அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு மாநகர காவல் ஆணையாளர் இது போன்ற ஒரு முன்னெடுப்பை முன்னெடுத்துள்ளதை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe