கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் மோடி.. ரயில் நேரம் தெரியுமா?

published 1 year ago

கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் மோடி.. ரயில் நேரம் தெரியுமா?

கோவை: கோவை-பெங்களூர் இடையே செயல்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயிலை வரும் 30ம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

கோவையில் இருந்து பெங்களூருக்கு 5 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த ரயிலுக்கான முன்னோட்டம் 26ம் தேதி நடைபெற்றது. அப்போது கோவை ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்து வந்தே பாரத் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் வழித்தடம் மூலமாக பெங்களூரை  5 மணி நேரம் 40 நிமிடங்களில் அடைந்தது. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த ரயில் இயக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலையும், மங்களூர்-கோவா வந்தே பாரத் ரயிலையும் நாளை டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பெங்களூரில் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில், புதிய வந்தே பாரத் சேவை துவங்கப்பட உள்ளது அவர்கள் மத்தியில் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செயல்பட உள்ளது. இந்த ரயில் தினமும் காலை 5 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில்  நிலையத்தை அடையும், மீண்டும் அங்கிருந்து இரவு 1.40க்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe