கோவை ஸ்டார் ஓட்டலில் ரூ.11 லட்சம் மோசடி செய்த தம்பதி…

published 1 year ago

கோவை ஸ்டார் ஓட்டலில் ரூ.11 லட்சம் மோசடி செய்த தம்பதி…

கோவை: கோவையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் ரூ. 11 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்சில் ஸ்டார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கோவை பெல்லாதி டீச்சர்ஸ் காலனி வெங்கடாசலபதி தெருவை சேர்ந்த பிரகாஷ்(29) என்பவர் கேஷியராக வேலை பார்த்தார்.

இவர் ஓட்டலுக்கு வாங்கும் பொருட்களின் கணக்கு விவரங்களை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 19ம் தேதி வரை போலியான கணக்கை காண்பித்து பொருட்கள் வாங்கிய விதத்தில் ரூ. 11 லட்சத்தை பிரகாஷ் மோசடி செய்தது ஓட்டல் நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது.

இது குறித்து ஓட்டல் மேலாளர் சுமன் ஜிதிவாரி(53) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், இந்த மோசடிக்கு பிரகாசின் மனைவி மோகனபிரியா உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் ஓட்டல் கேஷியர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மோகனபிரியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe