வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோவை மாநகரின் மத்தியில் சிலை நிறுவ வேண்டும்- மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை கோரிக்கை….

published 1 year ago

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோவை மாநகரின் மத்தியில் சிலை நிறுவ வேண்டும்- மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை கோரிக்கை….

கோவை: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வீரபாண்டியன் சிலைக்கு படத்திற்கும் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கோவை மாவட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அயோத்தி ரவி, சரவணக்குமார், பேரூர் மணி, பேரூர் விக்கி, விஜய் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர்கள் கோவை மாநகருக்கு மத்தியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை நிறுவ வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe