உக்கடம் நவீன சுத்திகரிப்பு நிலையம் வருகிறது.!

published 2 years ago

உக்கடம்  நவீன சுத்திகரிப்பு நிலையம் வருகிறது.!

கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

100 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது. இதனிடையே, உக்கடம் பெரியகுளத்தில் அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘உக்கடம் பெரியகுளத்தில் சாக்கடை தண்ணீர் கலக்காமல் இருக்கச் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே, தண்ணீர் மாசு அடைவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூடுதலாக அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe