பீளமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு...

published 1 year ago

பீளமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு...

கோவை: கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ராஜாராமின் மனைவி சுகந்தி(42). இவர் நேற்று நேரு நகர் பெரியார் நகரில் தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் எதிரே வந்த நபர் திடீரென சுகந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe