சாயிபாபா காலனியில் வடிவேலு படபாணியில் ஓட்டலில் திருடிய நபர்!

published 1 year ago

சாயிபாபா காலனியில் வடிவேலு படபாணியில் ஓட்டலில் திருடிய நபர்!

கோவை: சாயிபாபா காலனியில் ஓட்டலில் வைத்திருந்த செல்போனை திருடிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த கோவில்மேடு தவசி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்(38). இவர் சாயிபாபா காலனி கேகே புதூரில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஓட்டலில் இருந்தார். அப்போது அவர் செல்போனை டேபிள் மீது வைத்திருந்தார்.

ஓட்டலுக்கு வந்த யாரோ நைசாக அவரது செல்போனை திருடி சென்று விட்டார். இது குறித்து தேவேந்திரன் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், செல்போன் திருடியது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாரீஸ்வரன்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe