ரோந்து சென்று கொண்டிருந்த போது போலிசாரை மிரட்டிய 2 பேர்...

published 1 year ago

ரோந்து சென்று கொண்டிருந்த போது போலிசாரை மிரட்டிய 2 பேர்...

கோவை: கோவையில் இரவு ரோந்து பணியின் போது போலீசாரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் சுங்கம் பைபாசில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிலர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீஸ்காரர் போதுராஜ் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பேர் போலீஸ்காரர் போதுராஜை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போதுராஜ் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், போலீஸ்காரரை திட்டி மிரட்டல் விடுத்தது குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அகமத் சயத்(39), உக்கடம் பகுதியை சேர்ந்த அப்பாஸ்(40) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe